செவ்வாய், 22 ஜூலை, 2025

வளர்ந்து கொண்டே போகும் வீட்டு வாடகை! வாயை பிளக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது

சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வீட்டு வாடகைகள் முந்தைய ஆண்டுகளை விட நடப்பு ஆண்டுகளில் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மல மல வென உயர்ந்துள்ளது. நாம் சம்பாதிப்பது எல்லாம் வீட்டு வாடகைக்கு போய்விடும் என்ற எண்ணம் ஏற்படும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்த இரண்டு நகரங்களிலுமே வேலை வாய்ப்புகள் மற்றும் கம்பெனிகள் அதிகமாக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாகவே வீட்டு வாடகை ஆனது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த இரண்டு நகரங்களிலும் வீட்டு வாடகை ஆனது முற்றிலும் மாறுபடுகின்றன.புறநகர் பகுதிகளுக்கு வீட்டு வாடகை தனியாக மற்றும் பெருநகர் பகுதிகளில் அதற்கேற்றபடி தனித்தனியாக வீட்டு வாடகை எனது மாறுபடுகின்றன. 

பொதுவாக சிறிய வீடுகள் அதற்கேற்ற வாடகை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்றபடி அதற்கு ஒரு வாடகை என தனித்தனியாக உள்ளது. நாம் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள சராசரி வாடகைகளை பற்றிய இந்த பதிவில் முழுவதும் காண்போம்! 

முதலில் சென்னையில் உள்ள வாடகை நிலவரத்தை பற்றி நாம் முழுவதும் பார்ப்போம்! இந்தப் பதிவில் சராசரி வாடகை நிலவரத்தை பற்றி பார்ப்போம்! 

  • 1BHK- ₹6000-₹15000 வரை 
  • 2BHK- ₹12000-25000 வரை 
  • 3BHK-₹20000-40000 வரை 

பிரபலமான பகுதியில் மாறுபடுகின்றன:

அண்ணா நகர்,வேளச்சேரி,நுங்கம்பாக்கம்,அடையார் போன்ற சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் வாடகை மிகவும் அதிகமாக உள்ளது. நீங்கள் தங்கும் பொழுது அதிக அளவு சம்பாதிக்க கூடிய ஒரு நபராக இருந்தால் நீங்கள் இந்த பகுதியில் போய் வாடகைக்கு வீடு இருக்கலாம். சென்னையில் அட்வான்ஸ் தொகையானது மூன்று மாதங்களுக்கு நீங்கள் கொடுப்பது போல் இருக்கும்.

இது போலவே சென்னையின் புறநகர் பகுதிகளில் வாடகை சிறிதளவு குறைவாக இருக்கும். சென்னையில் வாடகை வீடுகள் அதிக அளவில் இருந்தாலும் நல்ல வாடகை வீடு வேண்டுமென்றால் நீங்கள் அதற்கு ஏற்ற வாடகை கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு அவர்கள் வாடகைக்கு வீடு கொடுப்பார்கள்.

சென்னையில் உள்ள சிறிய வீடுகள்: 

சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள வீடுகள் ஓரளவிற்கு வாடகை குறைவாக இருக்கும் எனவே மலிவான விலையில் வாடகை வேண்டும் என்பவர்கள் சென்னையில் புறநகர் பகுதிகளில் வாடகை வீடுகள் பார்ப்பது மிகவும் நல்லது. இவ்வகை வாடகைகள் அவர்களுக்கு ஓரளவிற்கு ஏற்றவாறு கொண்டு இருக்கும். 

அடுக்குமாடி குடியிருப்புகள்:

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் படுக்கையறைக்கு ஏற்றார் போல் வாடகை மாறுபடும். இங்கு பராமரிப்பு மிகவும் சரியாக இருக்கும் நீங்கள் இதற்கு வாடகை ஒரு படுக்கையறை கொண்ட அறைகளுக்கு தனியாகவும் இரண்டு படுகைகளை கொண்ட அறைகளுக்கு தனியாகவும் மாறுபடும். 

தனி வீடுகள்: 

சென்னையில் தனி வீடுகள் வேண்டும் என்றாலும் கிடைக்கும் நீங்க வீடுகளில் அளவை பொறுத்து வாடகையானது வெவ்வேறாக இருக்கும் எனவே தனி வீடுகளும் இங்கு கிடைக்கின்றன.

பெங்களூரில் உள்ள சராசரி வாடகை நிலவரம்: 

  • 1BHK- ₹7000-₹18000 வரை 
  • 2BHK- ₹15000-29000 வரை 
  • 3BHK-₹30000-42000 வரை 

பிரபல பகுதிகளில்: 

ஒயிட் ஃபீல்ட்,மாரத்த ஹள்ளி,சர்ஜாபூர் சாலை,ஹெப்பல்,இந்திரா நகர் போன்ற முக்கிய பகுதிகளில் வாடகை மிகவும் அதிகமாக இருக்கும். நீங்கள் இந்த பகுதிகளில் வாடகை வீடு வேண்டும் என்றால் அதிக அளவு சம்பாதித்தால் மட்டுமே இங்கு தங்க உங்களுக்கு ஏற்றபடி இருக்கும் இது வாடகை வீடுகள் மிகவும் சிறப்பாகவும் கிடைக்கும்.

பெங்களூரில் பெரும்பாலான இடங்களில் வாடகை குறைவாகவும் பெரும்பாலான இடங்களில் மிகவும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. இங்கு வேலைவாய்ப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் அதிகமாகவும் வேலை இல்லாத இடங்களில் மிகக் குறைவாகவும் வாடகை வீடுகள் கிடைக்கின்றன. இந்த பகுதிகளில் அட்வான்ஸ் தொகை இரண்டு மாதங்கள் கொடுக்கலாம் என சட்ட வரம்புகளும் உள்ளன.

சென்னை மற்றும் பெங்களூரு இந்த இரண்டு பகுதிகளிலும் உங்களுக்கு தனியாக அல்லது குடும்பத்துடன் தங்குவதற்கு ஏற்றார் போல் நீங்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். சென்னையில் உள்ள பகுதிகளில் நீங்கள் தனியாக வீடு கட்டுவதற்கு இடமும் அதிக அளவில் விற்பனைக்கு இருக்கின்றன. இங்கு அதிக அளவில் தமிழ் சினிமா பிரபலங்கள் வசிக்கும் இடங்களும் இருக்கின்றன. மேலும் பல்வேறு வகையான வேலை வாய்ப்பு கம்பெனிகளும் மற்றும் தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன.

ஒப்பந்தம்:

  • நீங்கள் இருநகரங்களிலுமே வீடுகளை வாடகை எடுக்கும் போது நீங்கள் வீட்டின் உரிமையாளரிடம் ஏழுத்துப்பூர்வமான படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • அந்தப் படிவத்தில் வீட்டின் வாடகை தொகை மின்சார தொகை மற்றும் ஒப்பந்த தொகை தண்ணீர் தொகையில் என அனைத்தும் அதில் குறிப்பிட்டு இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் அவர்கள் அடிக்கடி மாற்றிக்கொண்ட இருப்பார்கள்.
  • நீங்கள் வீட்டின் உரிமையாளரிடம் மிகவும் அன்பாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும்.

சென்னை மற்றும் பெங்களூரு இரண்டு நகரங்களிலும் அதிக அளவு சுற்றுலா இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவை இருக்கின்றன. நீங்கள் விடுமுறை நாட்களில் அதிக அளவு மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏற்றபடி இரண்டு நகரங்களிலுமே சுற்றுலா தளங்கள் கோவில்கள் மற்றும் பல்வேறு வகையான திரு விழாக்கள் கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன. 

நீங்கள் பெரிய பெரிய மாலுக்கு சென்று உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கலாம் ஏதாவது ஒரு பண்டிகை வந்தால் இங்கு மிகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. நீங்கள் கிராமத்தில் இருந்து நகரத்தில் வாழ விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் அங்கு அதிக அளவு இயற்கை பகுதிகளை காண முடியாது இருந்தாலும் அதிக அளவு மக்கள் இந்தப் பகுதிகளில் சந்தோஷமாகவும் அழகாகவும் வாழ்ந்து வருகின்றனர். 

உங்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் உடைகள் அனைத்தும் இங்கு குறைவான விலையிலும் அதிகமான விளைவிலும் இரண்டு நிலையிலும் உங்களுக்கு ஏற்றபடி நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

உங்கள் பிள்ளைகள் படிப்பதில் மற்றும் விளையாடுவதில் சோம்பேறித்தனம் செய்கிறார்களா?இதோ சில யோசனைகள்!

படிப்பதிலும் மற்றும் விளையாடுவதிலும் உங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டும் என்றால் நீங்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி நீங்கள் அவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் படிப்பதையும் விளையாடுவதையும் சரியான முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்கும் விதத்தில்தான் அவர்களின் எதிர்காலம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எனவே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து என்ன கற்றுக் கொடுக்கிறார்களோ அதை தான் பிள்ளைகள் செய்வார்கள் எனவே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உங்களின் பிள்ளைகள் இதில் அதிக திறமை பெற்றிருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அதற்கேற்றபடி நீங்கள் அவர்களுக்கு பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

நீங்கள் கண்டிப்பதினாலோ அல்லது அடிப்பதினாலோ எந்த ஒரு பயனும் இல்லை எனவே நீங்கள் அவர்களுக்கு என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டறிந்து அவர்களுக்கு அதை சரியான முறையில் பயிற்சி அளித்தால் மிகவும் நன்றாக பிள்ளைகள் வருவார்கள் என்பதை அறிந்திருப்பீர்கள்!

படிப்பு: 

நீங்கள் பாடத்தினை அவர்களுக்கு மிகவும் தெளிவாகவும் மாணவர்கள் விரும்பும் வகையிலும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

நீங்கள் அவர்களுக்கு விருப்பமில்லாத வகையில் கற்றுக் கொடுத்தால் அவர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை எனவே நீங்கள் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் பாடத்தினை மிகவும் சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் அழகாகவும் எளிய முறையிலும் பாடத்திட்டங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு தனி சிறப்புகள் இருக்கும் எனவே நீங்கள் அதை கண்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.



மேலும் ஒரு மாணவருக்கு கணிதம் மிகவும் பிடிக்கும் இன்னொரு மாணவருக்கு படம் வரைதல் மிகவும் அதிகமாக பிடிக்கும் இன்னொரு மாணவருக்கு நடனம் ஆடுவதில் அதிக ஆர்வம் இருக்கும் எனவே நீங்கள் அதனை கண்டறிந்து மாணவர்களை ஊக்குவித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் தைரியமாகவும் அந்த செயலை செய்வார்கள்.

எனவே ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை என்ன திறமைகள் இருக்கிறது என்பதை கண்டறிந்து அவர்களை ஊக்குவியுங்கள். 

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு சரியான கால அட்டவணைகள் கொடுக்க வேண்டும்.அவர்கள் சரியான நேரத்தில் காலையில் எழுவது முதல் இரவு படுக்கும் வரையில் சரியான நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.

நேரத்தை கடைபிடித்தால் மட்டுமே அவர்கள் வாழ்வில் மென்மேலும் வளருவார்கள் எனவே நீங்கள் நேரத்தை வீணடிக்க பிள்ளைகளை அனுமதிக்காதீர்கள்.விடுமுறை நாட்களில் மட்டுமே அவர்களுக்கு அவர்கள் விருப்பம் போல் விட்டு விடுங்கள்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பிள்ளைகள் ஏதாவது ஒரு சிறிய வெற்றி பெற்றால் கூட அவர்களை நீங்கள் பாராட்டினால் அவர்கள் அதிக அளவு மகிழ்ச்சி பெற்று மென்மேலும் அதில் சாதிப்பதற்கு அவர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும்.

எனவே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை தட்டிக் கொடுங்கள் அவர்கள் மீது தேவையற்ற சொற்களை அல்லது அடிப்பதையோ நிறுத்திவிட்டு நீங்கள் அவர்களை தட்டிக் கொடுங்கள் அவர்களை மகிழ்ச்சியாக இருக்க சொல்லுங்கள் இதன் மூலமாகவே மாணவர்கள் மிகவும் தெளிவாகவும் இருப்பார்கள் கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள். 

விளையாட்டு: 

நீங்கள் உங்களது பிள்ளைகள் என்ன விளையாட்டில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை கண்டறிந்து நீங்கள் அதில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் அந்த விளையாட்டில் அவர்கள் தோல்வியடைந்தால் கூட நீங்கள் அவர்களை மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்ய சொல்லுங்கள் கண்டிப்பாக அவர்கள் அதில் பெரிய வெற்றி காண்பார்கள்.

நீங்கள் உங்களது பிள்ளைக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் அவர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் அனைத்தையும் நீங்கள் சரியான நேரத்தில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் உங்களது பிள்ளைகள் சரியாக தூங்குகிறார்களா என்பதை பார்க்க வேண்டும். உடல் ஆரோக்கியமே முதலில் முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பிறகுதான் அனைத்தும் எனவே நீங்கள் உங்களின் பிள்ளைகள் உடலின் ஆரோக்கியமே முக்கியம் என்பதை எடுத்து சொல்லுங்கள். பிள்ளைகளுக்கு தேவையான நடை பயிற்சி உடற்பயிற்சி அனைத்தையும் கற்றுக் கொடுங்கள். அவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் கவனத்துடனும் விளையாட்டுகளை விளையாடச் சொல்லித் தாருங்கள்.

பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் நீங்கள் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்து அவர்களுக்கு கொடுங்கள்.உங்களின் பிள்ளைகளை நேர்மறையாக யோசிக்க சொல்லுங்கள் எந்த சூழ்நிலையிலும் தவறான பாதைக்கு எடுத்துச் செல்லாதீர்கள் நீங்கள் அவர்களை நேர்மறையான எண்ணத்துடன் வளர்த்து வாருங்கள்.

ஆடி மாதத்தில் கலைகட்டும் ஆடு கோழி வியாபாரம்!

தற்போது தமிழ் மாதத்தில் ஆடி மாதம் பிறந்துள்ளதால் மக்கள் அனைவரும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் விட்டு நேர்த்திக் கடன் செய்து வழிபட்டு வருகிறார்கள். இந்த ஆடி மாதம் முழுக்கவே நிறைய பேர் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து பூஜை செய்து தலைமுடி காணிக்கை கொடுத்து மொட்டை அடித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடுத் திரும்புகிறார்கள்.

தினமும் அசைவ உணவுகள் இல்லாமல் ஆடி மாதம் செல்லாது. அப்படி இருக்கையில் ஆடு கோழி வளர்ப்பவர்கள் இந்த மாதம் முழுக்கவே கொண்டாட்டம்தான். ஜோராக வியாபாரம் பிச்சிக்கிட்டு போகும்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறும். இதில் ஆடு கோழி மாடுகள் என அதிகமாக வியாபாரத்திற்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. ஆடி மாதம் பிறந்த காரணத்தினால் இந்த மாதம் முழுக்கவே வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

திருவண்ணாமலை உழவர் சந்தையில் திருவண்ணாமலை மக்கள் மட்டுமல்லாமல் செங்கம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்கள் நகர்புறங்களை வசிப்பவர்கள் மற்றும் வெளியூரில் இருந்து வருபவர்கள் முதலானோர் உள்பட நிறைய பேர் ஆடு கோழிகளை வாங்கி செல்கிறார்கள்.

ஆடி மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் மக்கள் தங்களுக்கு குலதெய்வ கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செய்வது மட்டுமல்லாமல் காதணி விழா நடைத்துவார்கள்.. இந்த காதணி விழாவுக்கு பிரியாணி அல்லது அசைவ உணவுகள் இல்லாமல் இருக்காது. அப்படி இருக்கும்போது அதற்கும் சேர்த்து ஆடு கோழி நிறைய வியாபாரம் நடைபெறுவதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

முக்கியமாக காதணி விழாவிற்கு நிறைய பேர் கோழிகளை தான் பிரியாணி செய்வதற்கும் கறி குழம்பு வைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். மிகவும் குறைந்த நபர்கள் மட்டும்தான் ஆடுகளை காதணி விழாவிற்கு விருந்தாக படைக்கிறார்கள். 

எல்லோரும் ஆடி மாதத்திற்குள் காது குத்தாதவர்கள் காது குத்தி தடபுடலாக மக்களுக்கு சாப்பாடு போட்டு விட வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த மாதம் முழுவது அங்கங்கு காது குத்து விழாக்கள் நடைபெறும். 

யாரெல்லாம் காது குத்துவார்கள்? 

ஒரு குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள் பெற்றவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளை பற்றவர்கள் தங்களுக்கு இந்த பிள்ளைகளை போதும் என்று முடிவெடுத்த பிறகு அவர்களுக்கு இரண்டு வயதுக்கு மேல் ஆன பிறகு ஊரை எல்லாம் அழைத்து தடபுடலாக அசைவ உணவை பரிமாறி காதுக்குத்து விழா நடத்துவார்கள். 

வசதி வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் குலதெய்வ கோவிலில் குழந்தைகளுடன் சேர்த்து பெற்றோர்களும் மொட்டை அடித்துவிட்டு பிறகு ஒரு பெரிய மண்டபத்தில் நிறைய பேரை அழைத்து வெகு சிறப்பாக இந்த விழாவை நடத்துவார்கள்.

வசதி வாய்ப்பில்லாதவர்கள் எளிமையாக காதணி விழாவை தங்கள் குலதெய்வ கோவிலில் தங்கள் குழந்தைகளுடன் தாங்களும் மொட்டை அடித்துக்கொண்டு தங்களுக்கு முக்கியமான, தெரிந்த, சில பல உறவுகளை மட்டும் அழைத்து குலதெய்வ கோவிலிலே காதணி விழா நடத்தி முடிப்பார்கள்.

ஆனால் எல்லோருமே ஆடி மாதத்தில் மட்டும் தான் காதுக் குத்துவார்கள். ஆடி மாதம் முடிந்து விட்டால் அதற்குப் பிறகு தங்கள் குழந்தைகளுக்கு யாருமே காது குத்த மாட்டார்கள். காது குத்தும் நிகழ்ச்சி ஆண், பெண் இரண்டு குழந்தைங்களுக்கும் சேர்த்து தான் நடைபெறும்.

ஆனால் வளர வளர பெண் குழந்தைகள் அந்த குத்திய காதுகளை பராமரித்து நகை போடும் அளவிற்கு காதை பக்குவப்படுத்துவார்கள். ஆனால் ஆண் குழந்தைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு குத்திய காதுகள் துருத்தி திரும்ப துளைகள் மூடிக்கொள்ளும்.

திருவண்ணாமலை உழவர் சந்தை நிலவரம் :

திருவண்ணாமலையில் மாவட்ட உழவர் சந்தையில் மட்டுமே நேற்று முன்தினம் 10 லட்சம் பேருக்கு மேல் வியாபாரம் நடைபெற்றதாக ஒட்டுமொத்த வியாபார சங்கத்தினர் கூறுகின்றனர். ஆடி மாதம் என்பதால் ஆடு கோழிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் உட்பட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

உங்கள் பகுதியில் எந்த கோவில் சிறப்பாக மக்களால் கொண்டாடப்படுகிறது என்று நமது கருத்துப் பக்கத்தில் தெரிவிக்கவும். மேலும் பல நல்ல பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைதள பக்கத்தில் பின்தொடரவும்.

நன்றி வணக்கம்!

தங்க விலை ₹70 ஆயிரத்தை நெருங்கியது

தங்கம் விலை இப்படியே உயர்ந்து கொண்டே போனால் என்ன செய்வது? இந்த பேச்சு தான் கடந்த சில மாதங்களாக எங்கும் ஒலித்து வருகிறது.

நாம் அனைவருக்கும் தங்கம் என்பது அத்தியாவசிய தேவையான மாறிவிட்டது. அதாவது சேமிப்பை தங்கம் மூலமாகத்தான் நிறைய பேருக்கு செய்கிறார்கள். இது மட்டும் அல்லாமல் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அங்க நகைகள் இல்லாமல் அந்த விசேஷமே இல்லை. 

எந்த ஒரு திருமணமும் தங்கம் இல்லாமல் நடப்பதில்லை; தாலியில் தங்கம், கழுத்தில் தங்கம், கையில் தங்கம் என எங்கு பார்த்தாலுமே நகைகள் தங்கம் சார்ந்த பொருட்கள் இல்லாமல் எந்த விசேஷமும் நடப்பதில்லை. அப்படி இருக்கையில் தங்கம் விலை ஏறினால் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரம் மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும்.

கடந்த ஆண்டு 2024 மார்ச் மாதம் ஒரு பவுன் ரூபாய் 50,000 என்ற உச்சத்தை தங்க விலை எட்டியது அப்போதே இவ்வளவு விலை என பேசப்படும் நிலையில் அதோடு நிக்காமல் மேலும் விலை அதிகரித்துள்ளது. 

ஒவ்வொரு நாளும் புதிய விலை உயர்வு என்ற அடிப்படையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை கடந்த கடந்து வந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டுமே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டுமே விலை உயராமல் ஒரு பவுன் ரூபாய் 55 ஆயிரம் முதல் ரூபாய் 56 ஆயிரம் வரையில் நிறையாக இருந்தது. 

அதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இருந்து மீண்டும் ஏற்றத்தை நோக்கி தங்கம்  விலை பயணித்தது. அதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி ஒரு பவுன் ரூபாய் 60 ஆயிரம் என்ற நிலையையும் அடைந்தது. 

அதனை அடுத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான நாட்களில் விலை உயர்வே இருந்தது. இதனால் கடந்த மாதம் மார்ச் 14ஆம் தேதி ஒரு பவுன் ரூபாய் 65 ஆயிரத்தை தொட்டது. 

இதற்குப் பிறகாவது விலை குறையுமா என்ற கேள்வி அனைவரிடமும் இருந்த நிலையில் இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை யாரும் கடிவாளம் போட முடியாது உச்சத்திலேயே தொடர்ந்து பயணிக்கும் என சொல்லப்படுகிறது. 

தங்க விலை உயர்வுக்கு என்ன காரணம்? 

அதைக் ஏற்றது போல தங்கம் விலை அதிரடியாக உயருவதும் சற்று இறங்குவதுமாகவே இருக்கிறது அமெரிக்க ஜனாதிபதி ஏற்றம் பரஸ்பர வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வந்த நேரத்தில் தங்கம் விலை கடந்த நாலாம் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரை குறைந்து வருகிறது. 

பரஸ்பர வரி விதிப்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்ததால் பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

இதனை தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது இதனால் அதன் விலை ராக்கெட் வேகத்தில் கிடுகிடு என உயர தொடங்கி இருக்கிறது. 

அதன்படி கடந்த மூன்று நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது அதாவது கடந்த ஒன்பதாம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் எட்டு கிராமுக்கு ரூபாய் 155 பவுனுக்கு ரூபாய் 1450 உயர்ந்துள்ளது அன்றைய தினம் ஒரு கிராம் பவுன் ரூபாய் 67,250 விற்பனை ஆனது. 

நேற்று முன்தினம் கிராமுக்கு ரூபாய் 150 பவுனுக்கு ரூபாய் 1200 உயர்ந்து ஒரு பவுன் ரூபாய் 68,450 க்கு வியாபாரம் ஆனது இதுதான் இதுவரை தங்கத்தின் உச்சபட்ச விலை ஆக எடுததது ஆனால் அதிரடியாக நேற்று கிராமுக்கு ரூ.185 பவுனுக்கு ரூபாய் 1480 பேருந்து ஒரு கிராம் ரூபாய் 845க்கும் ஒரு பவுன் ரூபாய் 69 ஆயிரத்து 960 க்கும் விற்பனை செய்யப்பட்டது இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்துவிட்டது. 

அதாவது ஒரு பவுன் ரூபா 70 ஆயிரத்தை நெருங்கி விட்டது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூபாய் 520 பவுனுக்கு ரூபாய் 4560-ம் அதிகரித்துள்ளது இதே வேகத்தில் சென்றால் தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் 80 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

குறிப்பாக, நமது மக்கள் பயன்படுத்துவது 22 கேரட் தங்கம் மட்டும்தான்; 24 கேரட் தங்கம் சுத்தமான தங்கம் என்று கூறினாலும் அந்த 24 கேரட் தங்கத்தை நகைகள் செய்ய பயன்படுத்த முடியாது. அதனுடன் வேறு சில உலோகங்களையும் கலந்து தான் தங்க நகைகள் செய்யப்படுகிறது. ஆதலால் எந்த தங்க நகைகளும் சுத்தமான தங்கத்தை முழுவதுமாக பயன்படுத்தி தயாரிக்கப்படுவதில்லை.

இனி வரும் காலங்களிலும் தங்கம் விலை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆதலால் தங்கம் சேமிப்பு என்பது மிகவும் அவசியமான தேவையாக மக்களுக்கு இருக்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் உங்களுக்கு தெரியுமா? Tamil Xpress

இந்திய அரசியலமைப்பு:

இந்திய அரசியலமைப்பு என்பது ஓர் எழுதப்பட்ட அரசியல் அமைப்பு மற்றும் என்று உலகில் உள்ள நீண்ட அரசமைப்பு சட்டங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது இது ஒரு நீண்ட விளக்கமான விரிவான ஆவணமாக உள்ளது. 

இந்திய அரசியலமைப்பிற்கு 1935 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் முன்மாதிரியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசமைப்புச் சட்டத்தின் பல எழுதப் பட மரபு நெறிகள் எழுத்து வடிவில் நமது சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க கூட்டாட்சி முறை அரசமைப்புச் சட்டத்தின் மாநிலங்களுக்கு என்று தனித்தனியாக அரசமைப்புச் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவின் மையம் மற்றும் மாநிலங்களுக்கு பொருந்துமாறு ஒரே அரசமைப்பு சட்டம் தான் இருக்கின்றது. 

எனவே இந்தியா ஒரு பரந்த நாடாகும். பல்வேறு இனங்களும் பல்வேறு வகுப்புகளும் உள்ளதினால் அனைவரும் உரிமைகளும் பாதுகாக்க வேண்டிய கடமையாக இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அரசிற்கும் குடிமக்களுக்கும் வழிகாட்டு நெறிகளும் அடிப்படை கடமைகளும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

நாடாளுமன்ற அமைப்பு கொண்ட அரசு: 

மையத்திலும் பல மாநிலங்களிலும் நாடாளுமன்ற அமைப்பு கொண்ட அரசினை இந்திய அரசியலமைப்பு சட்டம் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கான காரணங்கள் பல இருக்கும். ஏற்கனவே இவ்வமைப்பு முறை நடைமுறையில் இருந்து வந்ததினால் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானது.

சட்டமன்றங்களுக்கு அமைச்சர்களை பொறுப்பாக்குகிறது. இந்திய குடியரசுத் தலைவர் இங்கிலாந்து ராணியை போன்ற அரசமைப்பு ஆட்சியாளர் ஆவார்.ஆனால் உண்மையான நிர்வாகம் அதிகாரம் பிரதம மந்திரி தலைவராகக் கொண்ட அமைச்சர் அவை செலுத்தப்படுகிறது .இத்தகைய ஆட்சி மொழியானது இங்கிலாந்து ஆட்சி முறையில் இருந்து பல வகையில் வேறுபடுகிறது. 

இங்கிலாந்தில் இருப்பது ஒற்றை ஆட்சி முறையாகும்.ஆனால் இந்தியாவிலோ பிறர் அல்லது கூட்டாட்சி முறை நடைபெறுகிறது. இங்கிலாந்து அரசமைப்புச் சட்டம் எழுதப்படாத ஒன்றாகும். ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டமும் அடிப்படை உரிமைகளைக் கொண்டது.இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொதுவாக குடியரசுத் தலைவர் அமைப்பு அரசு ஒன்றில் காணப்படும் இயல்புகளை கொண்டுள்ளது. 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் செய்தியை அனுப்புதல் பண மசோதா அல்லாத மசோதாக்களை நாடாளுமன்றத்தின் மறுகவனத்திற்கு அனுப்புதல் போன்றவை குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படுகின்றன. 

அடிப்படை உரிமைகள்: 

இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு அடிப்படை உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கின்றனர் சமத்துவத்திற்கான உரிமையை சுதந்திரத்திற்கான உரிமை சுரண்டப்படுதலுக்கு எதிரான உரிமை சமய உரிமை கலாச்சார உரிமை மற்றும் கல்வி உரிமை அரசமைப்பு தீர்வுகளுக்கான உரிமை இத்தகைய உரிமைகள் வழங்கக்கூடிய உரிமைகள் ஆகும் அடிப்படை உரிமைக்கான மீறுதல் இருக்கும்போது பொருத்தமான நீதி பேராணையுடன் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகும் உரிமையும் உண்டு உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலனாக திகழ்ந்தனர் அதுப வயது வந்த அனைவருக்கும் வாக்களிப்போம் உரிமை இருக்கின்றது.

வாக்களிக்க உரிமை: 

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வாக்களிப்பு உரிமைக்கு அரசமைப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது வயது வந்தவர் அனைவரும் இனம் மதம் மொழி என்ற பாகுபாடு இன்றி வாக்களிக்கிறான் 18 வயது நிரம்பிய வாக்களிக்க உரிமை இருக்கின்றன மற்ற நாடுகளில் படிப்படியாக கொடுக்கப்பட்டுள்ள வாக்குரிமை இந்தியாவில் உடனே கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. சுதந்திரமான பாரபட்சமற்ற நியாயமான தேர்தல்களை நடத்த தன்னுரிமை கொண்ட தேர்தல் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது.


இந்திய அரசியலமைப்பானது இந்தியாவின் அதிகாரப்பூர்வமான சட்ட ஆவணம் நிர்வாகம் நாட்டின் சட்ட ஆவணங்கள் மற்றும் குடிமக்களின் உரிமை குறித்த ஒரு கட்டமைப்பு ஆகும். இது 1949 நவம்பர் 26 அன்று ஏற்கப்பட்டு 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது இதனாலே ஜனவரி 26 அன்று இந்தியாவின் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முக்கிய அம்சங்கள்: 

இந்திய அரசியலமைப்பானது முழு எழுத்து வடிவம் கொண்ட உலகின் மிக நீண்ட அரசியலமைப்பு கொண்ட நாடாகும்.

448 பிரிவுகள் 12 அட்டவணைகள் 100க்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்ட ஒரு அரசியல் அமைப்பு ஆகும். 

உரிமை சமத்துவம் மத சுதந்திரம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை அடிப்படை உரிமைகளாகும். சுற்றுச்சூழலை பாதுகாத்தல் அறிவை வளர்த்தல் நாட்டை பாதுகாத்தல் போன்றவை நமது அடிப்படை கடமைகளாகும். 

இந்திய அரசியலமைப்பானது மூன்று கிளைகளை உள்ளடக்கியது. கூட்டாட்சி முறையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகாரங்களை பகிர்ந்து கொள்கின்றன.

அடிக்கடி சண்டை வர காரணம் இதுதானா? Reason of fighting

தமிழகத்தில் பெரும்பாலான குடும்பச் சண்டையானது வீதிக்கு வந்துள்ளது. ஒருவருக்கொருவர் வாக்குவாதம் மேற்கொண்டு இந்த சண்டையானது வீதி வரை வந்து அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இருவரில் யாராவது ஒருவர் அமைதியாகும் வரை இருவரின் குரலும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.ஆனால் ஒருவர் கூட விட்டுக் கொடுப்பதில்லை.

ஒருவர் பேசினால் அது என்னவென்று கூட தெரியாமல் அதற்கு மாறாக என்ன பேச வேண்டும் என்பது மற்றவர்களின் நினைவில் இருக்கின்றன. ஆனால் ஒருவர் கூறும் பொழுது அதை இன்னொருவர் என்ன கூறுகிறார் என்று யோசித்து ஒரு நிமிடம் கழித்து பதில் கூறினால் மிகவும் தெளிவாக இருக்கும். ஆனால் இதற்கு மாறாகவே நடக்கின்றன. இருவரின் யார் பெரியவர் என்று போட்டி போட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். சுற்றியுள்ள வேடிக்கை பார்க்கும் அனைவருக்கும் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று கூட யாரும் கேட்க மாட்டார்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

சண்டையில் காரணங்கள் என்பது மனித உறவுகளில் ஏற்படக்கூடிய ஒருவருக்கொருவர் உள்ளே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் உணர்ச்சி வெடிப்புகள் சுழ்நிலை சிக்கல்களில் ஏற்படும் விளைவுகள்.

பொதுவான காரணங்கள்: 

தவறான வார்த்தை: ஒருவர் பேச்சானது இன்னொருவருக்கு அவமதிப்பாக இருந்தால் அதன் மூலமும் சண்டை உருவாகிறது. 

தவறான செயல்: ஒருவர் மற்றொருவரிடம் தவறான செயல்கள் மேற்கொண்டால் இதன் மூலமும் சண்டை உருவாக காரணமாக உள்ளது.

பழைய சிக்கல்கள்: தீர்க்கப்படாத பழைய சிக்கல்கள் மூலமும் புதிதாக சண்டை உருவாக காரணமாக உள்ளது. 

தனிப்பட்ட பிரச்சனைகள்: பணம் வேலையின் அழுத்தம் மற்றும் குடும்ப சூழ்நிலை போன்றவை நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி இதன் மூலம் சண்டை உருவாகிறது. 

உணர்ச்சிக் கட்டுப்பாடு: 

நமது கோபம் வருத்தம் பொறாமை போன்றவைகள் நாம் கட்டுப்படுத்தாமல் இருப்பதன் மூலமும் சண்டை உருவாகிறது. 

தவறான புரிதல்: ஒருவர் கூறும் வார்த்தை அல்லது செயல் மற்றொருவர் தவறாக புரிந்து கொண்டு அதன் மூலமும் சண்டை உருவாகிறது. 

கருத்து வேறுபாடு: ஒருவர் கூறுவது நான் கூறுவது சரி என்று அவர் கூறுவார் இன்னொருவர் நான் கூறுவது தான் சரி என்று கூறுவார் இதன் மூலம் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி சண்டை உருவாக காரணமாக உள்ளது.

உறவுகளில் சண்டை காரணங்கள் : 

உறவினர்களின் நல்ல விசேஷ காலங்களில் பணமும் பொருளும் கொடுக்கும் பொழுது அது அவர்களுக்கு பூர்த்தியாகவில்லை என்றால் இதனை காரணமாக கொண்டும் சண்டை செய்வார்கள். 

கணவன் அல்லது மனைவி தனது குழந்தையினை சரியாக கவனிக்கவில்லை என்றால் இதன் மூலமும் இருவருக்கிடையில் சண்டை வருவதாக காரணமாக உள்ளது.

சரியான நேரம் ஒதுக்காத காரணத்தின் மூலமும் உறவுகளில் சண்டை ஏற்படுகிறது. 

பண விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றி உறவுகளில் சண்டை உருவாகிறது. 

மனநிலை மாற்றங்களால் கூட உறவுகளில் சண்டை ஏற்படுகிறது.

சில நபர்கள் மற்றவர்கள் பார்ப்பது கூட தெரியாமல் அதிக தீய சொற்களை பயன்படுத்தி மிகவும் மோசமாக பேசுவார்கள்.ஆனால் என்ன சண்டை என்று அவருக்கே தெரியாத அளவிற்கு அவருடைய சொற்கள் இருக்கும். இருவரின் வாய் அடங்கும் அளவிற்கு பேசிக் கொண்டே தான் இருப்பார்கள்.ஆனால் ஒருவர் கூட விட்டுக் கொடுக்காத அளவிற்கு பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். சுற்றிப் பார்ப்பவர்கள் அனைவரும் என்னடா இவர்களை எப்பொழுது அடித்து மற்றவர்கள் என்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டே இருப்பார்கள். 

சண்டை போடுபவர்கள் ஒருவராவது நாம் செய்வது சரியா நாம் பேசுவது சரியா என்று ஒரு நிமிடம் யோசித்தால் அந்த சண்டை ஆனது நிளாமல் இருக்கும். பெரும்பாலும் வேறு ஒருவரின் பேச்சை கேட்டு வீட்டில் இருப்பவர்கள் சண்டை போட காரணமாக அமைகிறது. எனவே அவரவர் வேலையை சரியாக செய்தால் சண்டை வர காரணமாக அமையாது. 

எனவே அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். வன்முறையால் எந்தப் பயனும் இல்லை என அவர்கள் உணர வேண்டும். வாழ்க்கையில் அனைவரும் ஒருவர் ஒருவர் உதவி செய்து மிகவும் ஒற்றுமையாக வாழ வேண்டும். சண்டை போட்டுக் கொள்பவர்களை நாம் நல்வழிப்படுத்தி அவர்களை திருத்தி நாம் அவர்களுக்கு வாழ்க்கையின் புரிதலை பற்றி நன்கு கூற வேண்டும். சண்டைக்கு முக்கிய காரணம் நாம் பேசுவது அதிகமாக இருப்பதால் தான் எனவே நீங்கள் பேசும் வார்த்தைகள் சரியானதா இல்லையா என்பதை ஆராய வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் சட்டங்கள் என்னன்னு தெரியுமா?

தேர்தல் சட்டம்:

தேர்தல் சுதந்திரமான முறையில் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டவைகள்: 

  • உலகத்தின் மிகப்பெரிய மக்களாட்சி கொண்டது இந்திய நாடாகும். நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • மக்களாட்சி தலை துவங்குவதற்கு இதற்கான தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றன.
  • மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு மக்களாட்சியின் மீது ஒரு நம்பிக்கை வருகின்றன. இதற்கான முறையான தேர்தல்கள் நடத்தி தன்னாட்சி பொருந்திய தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள் நடத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு முக்கியமான பொறுப்பாகும்.

தேர்தல் ஆணையம்: 

சட்டமன்றங்கள் நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறித்த தேர்தல் பற்றிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு கண்காணிப்பும் நெறிமுறைகளும் மற்றும் கட்டுப்பாடு மேலும் அவற்றிற்கான தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடும் கடமையாக உள்ளது. 

தலைமை தேர்தல் ஆணையரையும் குடியரசுத் தலைவரையும் அவ்வப்போது நிறையம் செய்யும் மற்ற தேர்தல் நேரையும் தேர்தல் ஆணையம் கொண்டிருக்கும். தலைமை தேர்தல் அனைவரையும் மாற்ற தேர்தல் ஆணையர்களையும் நாடாளுமன்றம் இதுகுறித்து இயற்றும் சட்டத்திற்கு இணங்க குடியரசுத் தலைவர் நியமிக்கப்படுகின்றார். 

தேர்தல் ஆணையர் சுமார் ஐந்து ஆண்டு காலத்திற்கு தனது பொறுப்பில் இருக்கின்றார். தேர்தல் ஆணையரின் சம்பளம் மற்றும் பணிகள் திறன் நிதியத்தில் இருந்து வழங்கப்படுகின்றன. தனது பணி காலத்தில் சம்பளமானது பணி நிபந்தனைகளோ மாற்ற முடியாது. 

இவையாவும் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மைகளை காப்பாற்றும் வழிமுறைகள் ஆகும். தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். எனவே அரசியல் அல்லது நிர்வாகம் இருக்குதல் இன்று சுதந்திரமாக செயல்பட வழி வகுக்கும். இதனால் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் ஒருதலைச் சார்புமின்றி செயல்பட உறுதி செய்யப்படுகின்றன. 

தேர்தல் ஆணையத்தின் பணிகள்: 

324 இன் கீழ் பணிகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன: 

  • நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் குடியரசு துணைத்தலைவர் வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் மீது கண்காணிப்பு நெறிமுறை மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றினை கொண்டிருத்தல். 
  • மேற்குறிப்பிட்ட தேர்தல்களை நடத்துதல் 
  • நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை வினா குறித்தும் குடியரசுத் தலைவருக்கும் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை குறித்து அலுவலருக்கும் ஆலோசனை வழங்குதல். 
  • தேர்தல் ஏற்பாடுகள் அல்லது தேர்தல் குறித்த தகராறுகளை விசாரிக்க தேர்தல் அலுவலர்களை நியமித்தல்.
  • தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்படுவது குறித்து தகராறுகளை தீர்த்தல். 
  • பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தொலைக்காட்சிகளும் வானொலிகளும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செயல்முறையில் நாளையும் நேரத்தையும் ஒதுக்குதல். 
  • தேர்தல் அட்டவணையை தயாரித்தல் நாட்களை குறித்தல் வெளியிடுதல் மற்றும் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தல்.
  • தேர்தலை நடத்துவதற்கு தேவையான அலுவலர்களை நியமனம் செய்தல். 
  • தேர்தலின் போது வேட்பாளர் வரம் கட்சிகளும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல். 
  • வாக்காளர் பட்டியலில் பிழைகள் ஏதும் இன்றி தயார் நிலையில் அவற்றை வைத்திருத்தல். 
  • தேர்தல் குறித்த மற்ற பொருட்களை கவனித்தல். 
  • தற்போது இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முதன்மை தேர்தல் ஆணையரையும் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டது. 

தேர்தல் சட்டம் குறித்து நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் சட்டமேற்றும் அதிகாரம்: 

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்தல் நிலை நடத்துவதற்காக குறிப்பிடப்படுகின்றன: 

  • வாக்காளர் பட்டியல் தயாரிப்பு 
  • தொகுதிகளை பிரித்தல் 
  • அதன் தொடர்பான அனைத்து பொருட்கள் குறித்தும் சட்டம் 
  • உறுப்பு 327 இன் கீழ் அதிகாரங்கள் 
  • 1950 மற்றும் 1951ம் ஆண்டுகளின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள்
  • 1952 ஆம் ஆண்டின் குடியரசு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் சட்டம் 
  • 1952 ஆம் ஆண்டின் தொகுதி பிரிவு அணை சட்டம் இந்த உறுப்பின் கீழ் உள்ளன. 

நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தினை மீறியோ அல்லது தன்னிச்சையாகவோ செயல்பட முடியாது. தேர்தல் ஆணையத்தின் மீது இரண்டு கட்டுப்பாடுகள் உள்ளன. 

நாடாளுமன்றமோ அல்லது மாநிலச் சட்டமன்றங்களும் ஒரு முறையான சட்டத்தை இயற்றி இருப்பின் சட்டங்களுக்கும் இணங்க தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். இரண்டாவதாக சட்டத்தின் ஆட்சிக்கு இணங்க செயல்பட வேண்டும். தன்னம்பிக்கையில் இயற்கை நீதிபதிகளுக்கு உட்பட்டு அது செயலாற்ற வேண்டும். சட்டத்தில் கூறப்படாத பகுதியில் தேர்தல் ஆணையம் தன் விருப்பம் போல் செயல்படலாம். 

வாக்களிக்கும் உரிமை சட்ட உரிமையாகும். இது அடிப்படை உரிமை அன்று....

வயது வந்த அனைவருக்கும் வாக்களிப்பு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டில் 61வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வாயிலாக வாக்களிப்பதற்கான குறைந்த அளவு வயது 21 இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இவ்வளவு சாதனைகள் செய்துள்ளாரா?

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாதனைகள்: 

தமிழக கிரிக்கெட் வீரர் ரவி அஸ்வின் அவர்கள் இந்திய அணிக்காக பல்வேறு சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கின்றார். இவர் அதிக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார். அஸ்வின் அவர்கள் இந்தியாவில் சுயர் பந்துவீச்சின் மாஸ்டர் ஆவார். இவர் மிகவும் நன்றாக வந்துகளை வீசி அதிகப்படியான விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவிற்கு அதிக பெருமைகளை சேர்த்துள்ளார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றதற்கு இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இவரின் சாதனைகள்:

  • சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 537 விக்கெட்களை எடுத்து இவர் ஒரு சாதனை படைத்துள்ளார். 
  • இவர் இந்திய அணியின் அணில் கும்ப்ளே அவர்களுக்கு அடுத்தபடியாக அதிக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கட்களை எடுத்தவர் ஆவார்.
  • இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆறு சதங்களும் மற்றும் 3500+ ரன்கள் அடித்தும் இருக்கிறா ர். எனவே இவர் பந்து வீசுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக  இருக்கிறார்.
  • 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் உறுப்பினராக இருந்திருக்கிறார். 
  • இவர் அதிகளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 11 மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டுகளை வென்றுள்ளார்.
  • 65 டி20 போட்டியில் 75 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இவர் 6 சதங்கள் 16 அரை சதங்கள் பேட்டிங்கில் அடித்துள்ளார்.

விருதுகள்: 

அஸ்வின் அவர்கள் இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டியில் அதிக அளவில் உழைத்திருக்கிறார். இவரை பாராட்டும் விதமாக நிறைய விருதுகளையும் இவர் வாங்கியுள்ளார். 

  • தேசிய மற்றும் அர்ஜினா விருது -2015
  • இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றுள்ளார் - 2025

IPL போட்டிகள்: 

  • இவர் சென்னை அணிக்காக IPL போட்டியில் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டில் சென்னை வெற்றி பெற்றதற்கு ஒரு முக்கிய காரணமாக இவர் இருந்திருக்கிறார்.
  • இவர் IPL 180+ விக்கன்களை வீழ்த்தியுள்ளார். இவர் IPL போட்டியில் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

இவரின் வாழ்க்கை பற்றிய சில தகவல்கள்: 

  • அஸ்வின் அவர்கள் சென்னை Vest Mambalam இல் பிறந்தவர். SSN College Of Engineering இல் IT பட்டம் பெற்றவர் ஆவார்.
  • அஸ்வின் அவர்கள் 2024 ஆம் ஆண்டு அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இது அனைவருக்கும் வருத்தத்திற்குரிய ஒன்றாக இருந்தாலும் இவர் இந்திய அணிக்காக பல்வேறு வகையில் தனது கடின உழைப்பினை செலுத்தியுள்ளார். 
  • மேலும் தமிழகத்தில் நடக்கும் TNPL இவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். 2025 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு மீண்டும் IPL விளையாடினர்.
  • அஸ்வின் அவர்கள் தனது திறமையையும் புத்திசாலித்தனத்தையும் கொண்டு இந்திய கிரிக்கெட் அணியில் தனது அடையாளத்தை பதிவு செய்துள்ளார். 
  • அஸ்வினைப் போலவே பல திறமையான விளையாட்டு வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடினார் நம் தமிழகத்திற்கு மிகவும் பெருமையாக இருக்கும்.
ஓய்வு அறிவிப்பு: 
  • இவர் டிசம்பர் 18 2024 ஆம் ஆண்டு அன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
  • இன்று எனது சர்வதேச கிரிக்கெட் போட்டியின் பயணத்தின் கடைசி நாள் என்று தோனியை போலவே கூறினார். 


தமிழ்நாட்டின் பெருமை: 
  • அஸ்வின் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
  • இவர் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர். 
  • தமிழ்நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமை அஸ்வினுக்கு உள்ளது. 
  • அஸ்வின் ஒரு மேட்ச் வின்னர் திறமையான ஆல் ரவுண்டர் 
  • இவர் அதிக அளவில் பாராட்டக்கூடிய ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார். 
  • இவரின் பயணம் முடிந்தாலும் இவர் செய்த அனைத்து சாதனைகளும் கிரிக்கெட் வரலாற்றில் இன்றியமையாததாக நிலைத்திருக்கும்.
கடைசி தருணங்கள்: 
ஓய்வு அறிவிப்பின்போது விராட் கோலி உடன் மிகவும் நெகிழ்ச்சிகரமாக பேசி அவருடைய கடைசி நிமிடங்களை செலவழித்தார். அதற்குரிய பதில் எனக்கு இன்னும் ஆற்றல் இருக்கிறது நான் கிளப் கிரிக்கெட்டில் விளையாடுகிறேன் என்று கூறினார்.